Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அரியலூர் : வி.கைகாட்டியில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லபட்ட 1கோடியே 50 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை உதவி வட்டாச்சியர் சரவணன் தலைமையிலான குழுவினர் ஆய்வில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் அந்த வழியே வந்த ICICI வங்கியின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி எடுத்து
செல்லபட்ட ஒரு கோடியே, 50 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அரியலூர் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு வாகனம் எடுத்து வரப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வாகனம் சிதம்பரம், பரங்கிபேட்டை, புவனகிரி, மேலணிகுடிகாடு உள்ளிட்ட இடங்களில் உள்ள ICICI வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு திருச்சி வாட் மையத்தில் வைப்பதற்காக சென்றதாக கூறப்பட்டது.